மேற்கு வங்கத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 11ஆனது

மேற்கு வங்காளத்தில் மேலும் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று
கரோனா தொற்று
Published on
Updated on
1 min read

மேற்கு வங்காளத்தில் மேலும் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சுவாசப் பிரச்னைகள் உள்ள நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் கொல்கத்தா மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இந்த நோயாளிகள் கண்காணிப்பில் உள்ளனர்.

திருவான்மியூர் ஏடிஎம்-ல் நூதன முறையில் திருட்டு: சிக்கியது வடமாநில கும்பல்!

சனிக்கிழமை வரை தொற்றுக்கு ஆளான நோயாளிகளின் எண்ணிக்கை 7. ஞாயிற்றுக்கிழமை மாலை மேலும் 4 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மே 19 வரை வங்காளத்தில் ஒரே ஒரு கரோனா தொற்று மட்டுமே இருந்தது. அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு எண்ணிக்கையை சுகாதாரத் துறை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com