மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மகாராஷ்டிரம்: விவசாய நிலத்தில் இருந்து பிடிபட்ட 8 அடி நீள முதலை

மகாராஷ்டிரத்தின் லத்தூர் மாவட்டத்தில் விவசாய நிலத்தில் இருநது 8 அடி நீள முதலை பிடிபட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

News image

கோப்புப்படம்.

Updated On :1 நவம்பர் 2025, 6:03 pm IST

மகாராஷ்டிரத்தின் லத்தூர் மாவட்டத்தில் விவசாய நிலத்தில் இருநது 8 அடி நீள முதலை பிடிபட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

முன்னதாக, அகமதுபூர் வட்டத்தில் உள்ள கேந்திரேவாடி, தலேகான் மற்றும் அந்தோர் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அருகிலுள்ள ஆற்றில் இருந்து வழிதவறி வந்த முதலையைக் கண்டதும் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனத் துறையைச் சேர்ந்த குழுவினர் கடந்த இரண்டு நாள்களாக அந்த முதலையை தேடி வந்தனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு கேந்திரேவாடியில் இருந்து சுமார் 100 கிலோ எடையுள்ள முதலையைப் பிடித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த காட்சி அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடையே அச்சத்தைத் தூண்டியதாக அவர் மேலும் கூறினார்.

கிராமவாசி சர்பஞ்ச் ஸ்ரீகாந்த் ரோஹிதாஸ் கர்பாரி கூறுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த முதலை ஆற்றில் காணப்பட்டதாகவும், ஆனால் அதைப் பிடிக்க முடியவில்லை.

இப்போது நீர் மட்டம் குறைந்துவிட்டதால், முதலை தென்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Summary

An 8-foot-long crocodile that had entered farmland in Maharashtra's Latur district was captured, officials said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.