மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆந்திரம்: கோயில் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிப்பு !

வெங்கடேஷ்வர கோயில் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 நவம்பர் 2025, 4:44 pm

இணையதளச் செய்திப் பிரிவு

வெங்கடேஷ்வர கோயில் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வெங்கடேஷ்வரா சுவாமி கோயில் உள்ளது. பிரபலமான இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

ஏகாதசியையொட்டி ஆந்திரம் ஸ்ரீகாகுளம் வெங்கடேஸ்வரா கோயிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமானதால் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 9 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

வழக்கமான சனிக்கிழமைகளில் 10,000 முதல் 15,000 பக்தர்கள் வரை கோயிலுக்கு வருவார்களாம்.

ஆனால் இன்று ஏகாதசி என்பதால் சுமார் 25,000 பக்தர்கள் திரண்டதாகக் கூறப்படுகிறது. இதுவே கூட்டநெரிசலுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோயில் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் வழங்கப்படும் என அம்மாநில அமைச்சர் நர லோகேஷ் அறிவித்துள்ளார்.

summary

CM has announced an ex-gratia of Rs 15 Lakhs for the deceased and Rs 3 Lakhs for those with serious injuries.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.