மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

பிகாரில் தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில் மீன்பிடித்த ராகுல் காந்தி

பிகாரில் தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில் சிறிது நேரம் ஒதுக்கி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீன் பிடிக்கச் சென்றார்.

News image

வலையால் மீன்பிடிக்கும் ராகுல் காந்தி.

Updated On :2 நவம்பர் 2025, 4:12 pm IST

பிகாரில் தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில் சிறிது நேரம் ஒதுக்கி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீன்பிடிக்கச் சென்றார்.

பிகார் சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி தலைவர்கள் பிகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில தேர்தல் பிரசாரத்திற்கு இடையே சிறிது நேரம் ஒதுக்கி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீன் பிடிக்கச் சென்றார்.

பெகுசரை மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் முடிந்த பிறகு அவர் மீன்பிடிக்கச் சென்றார். ராகுல் காந்தி ஒரு படகில் ஏறி குளத்தின் நடுவில் சென்றார்.

அவருடன் மாநில முன்னாள் அமைச்சர் முகேஷ் சாஹ்னி சென்றிருந்தார். அந்த இடத்தில் பல மீனவர்கள் இருந்தனர்.

ராகுல் காந்தியுடன் சேர்ந்து இடுப்பு ஆழம் வரை தண்ணீரில் பலர் இறங்கினர். இந்நிகழ்வின் காணொளி காங்கிரஸின் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

அப்போது, ராகுல் காந்தியுடன் மீனவர்கள் தங்கள் தொழிலில் சந்திக்கும் சவால்கள் மற்றும் போராட்டங்கள் குறித்து எடுத்துக்கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த விடியோ இணையளதங்களில் வைரலாகி வருகிறது-

Summary

Congress leader Rahul Gandhi, on November 2, took some time off the campaign trail in poll-bound Bihar to catch fish.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.