

எல்விஎம் -3 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
எல்விஎம் -3 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து எல்விஎம் -3 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக இன்று (நவ. 2) விண்ணில் செலுத்தப்பட்டது.
சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் 4,400 கிலோ கிலோ எடை கொண்டதால், புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்களில் அதிக எடையுடையதாக சிஎம்எஸ்-03 உள்ளது. இது இஸ்ரோவின் மிகப்பெரிய சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.
சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியதாவது,
எல்விஎம் -3 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. சிஎம்எஸ்-03 அதிக எடையுடைய செயற்கைக்கோள். இதன் பயன்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இன்று அனைத்தும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்றது.
எல்விஎம் 3 ராக்கெட் மூலம் 100% வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றி இஸ்ரோவில் திறன் வாய்ந்த விஞ்ஞானிகளால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. இந்த வெற்றியில் நாம் அனைவருமே பங்கெடுத்து கொண்டாட வேண்டும். செயற்கைக்கோள் விஞ்ஞானிகள் குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் காலம் மிகவும் சவாலானதாக இருந்தது. வானிலை நமக்கு எதிரானதாகவே இருந்தது. இருந்தபோதும் இந்த வெற்றி இஸ்ரோவில் உள்ள ஒவ்வொருவரின் தீவிர முயற்சியால் சாத்தியமாகியுள்ளது எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எல்விஎம் 3 ராக்கெட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.