பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

ராகுல் காந்தியின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு பற்றி..

News image

கிரண் ரிஜிஜு

Updated On :5 நவம்பர் 2025, 3:31 pm IST

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி கூறியது தவறானது மற்றும் ஆதாரமற்றது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

ஹரியாணாவின் தேர்தல் பட்டியல் தரவுகளை மேற்கோள்காட்டி 25 லட்சம் பதிவுகள் போலியானது என்றும், மாநிலத்தில் கடந்தாண்டு வெற்றி பெற்றது, தனது கட்சியிடமிருந்து திருடப்பட்டது என்றும் ராகுல்காந்தி தில்லியில் இன்று காலை தெரிவித்தார்.

ராகுல் காந்தி கூறிய தரவுகளுக்கு மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நாட்டை அவமதிக்க இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து ராகுல் காந்தி விளையாடுகிறார் என்று குற்றம் சாட்டினார்.

ராகுல்காந்தி குற்றம் சாட்டிய முறைகேடுக்கான 100 சதவீத ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறுகிறார். ஆனால் இது ஏமாற்று வேலை.

தேர்தல்களின்போது ராகுல் வெளிநாடு செல்கிறார், மக்களைச் சந்திப்பதில்லை. தேர்தலில் தோல்வியடைந்த பிறகு மற்ற கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார். அவர் கடுமையாக உழைக்கவோ, மக்களிடையே வாழவோ முடியாத ஒருவர் என்று கேலி செய்தார்.

வாக்களிப்பதில் ஏதேனும் முறைகேடு இருந்தால், அதைத் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தை அணுக வேண்டும். ஆனால் அதை அவர் ஒருபோதும் செய்வதில்லை என்று குற்றம் சாட்டினார்.

Summary

The BJP on Wednesday dismissed Rahul Gandhi's allegation of mass vote theft in the Haryana Assembly Polls as "false and baseless"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.