

பிகார் சட்டப்பேரவை முதல்கட்டத் தேர்தலில் முதல்வர் நிதீஷ் குமார், மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், பிகாரின் பக்தியார்பூரில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரும், பாட்னாவில் மாநில எதிர்க்கட்சித் தலைவரும் இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவும் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
மேலும், ராஷ்ட்ரீய ஜனதா கட்சியின் தலைவர்களும் பிகாரின் முன்னாள் முதல்வர்களுமான லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி உள்ளிட்டோரும் தங்களின் வாக்குகளை செலுத்தினர்.
இதேபோல், மத்திய அமைச்சர்கள் நித்யானந்த் ராய், சிராக் பாஸ்வான், பிகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா, பாஜக எம்பி ரவி சங்கர் பிரசாத், காங்கிரஸ் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்டோர் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.