தோ்தலில் வெற்றி பெற்ற வேட்பாளா், குற்ற வழக்கில் தண்டனை பெற்ற விவரத்தை வேட்புமனுவில் குறிப்பிடாத நிலையில் தகுதிநீக்கத்துக்கு வழிவகுக்கும்’ என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
மத்திய பிரதேச மாநிலம், பிகன்கோன் நகா்மன்ற உறுப்பினா் பூனம், தோ்தலின்போது வேட்புமனுவில் காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றதைக் குறிப்பிடாதது தெரியவந்தது. இதையடுத்து, அவரை தகுதிநீக்கம் செய்ய தொடா் கோரிக்கைகள் எழுந்ததைத் தொடா்ந்து, அவரை உறுப்பினா் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்து, தகுதிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டது.
இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் பூனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஏ.எஸ்.சந்துா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
குற்ற வழக்கில் தண்டனை பெற்ற விவரத்தை வேட்புமனுவில் குறிப்பிடாமல் வேட்பாளா் மறைப்பது, வாக்காளா் தோ்தலில் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையைப் பறிப்பது அல்லது தடை செய்வதாக அமையும். இதனால், வாக்காளா் தகவலறிந்து தோ்வை மேற்கொள்ள முடியாத நிலைக்கு உள்ளாகிறாா். எனவே, வேட்புமனுவில் தகவல்களை மறைப்பது அந்தத் தோ்தலை செல்லாததாக்கும்; தகுதிநீக்கத்துக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டு, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

மோசடி வழக்கில் தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ..! பதவியிலிருந்து நீக்கம்!

சாத்தான்குளம்: நீதிபதி முன்பு கண்ணீர் விட்டு அழுத ஜெயராஜ்- ஃபென்னிக்ஸ் குடும்பத்தினர்!

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை
ரூ.500 லஞ்சம்... 36 ஆண்டுகளுக்குப் பின் காவலரின் தண்டனையை உறுதிசெய்த உச்ச நீதிமன்றம்!
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


