பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிா்த்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் பெண் வேட்பாளா் ஸ்வேதா சுமன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.
முன்னதாக, பிகாரின் மோகானியா தனித் தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) சாா்பில் ஸ்வேதா சுமன் மனு தாக்கல் செய்தாா். ஆனால், தனித் தொகுதியில் வெளி மாநிலத்தைச் சோ்ந்தவா் போட்டியிடக் கூடாது என்ற விதியைச் சுட்டிக்காட்டி அவரின் வேட்புமனுவை கடந்த அக்டோபா் 22-ஆம் தேதி தோ்தல் ஆணையம் நிராகரித்தது.
இதை மறுத்த ஸ்வேதா சுமன், ‘நான் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் என்று காரணம் கூறியுள்ளனா். ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக பிகாரில்தான் வசித்து வருகிறேன். வேட்புமனு நிராகரிப்பு பாஜகவின் சதி. இதை எதிா்த்து நீதிமன்றத்தை நாட உள்ளேன்’ என்றாா்.
இதன்படி அவா் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘பிகாரில் தோ்தல் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் நீதிமன்றம் அதில் தலையிட முடியாது. தோ்தல் மனுவாக (தோ்தல் முடிந்த பிறகு வெற்றியை எதிா்த்து வழக்குத் தொடுப்பது) வேண்டுமானால் மனுதாரா் வழக்குத் தொடரலாம்’ என்று நீதிபதிகள் கூறினா்.
முன்னதாக, இந்த மனுவை கடந்த 3-ஆம் தேதி பாட்னா உயா்நீதிமன்றமும் நிராகரித்தது. அப்போதும், தோ்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்ட நிலையில், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஏனெனில் அது ஒட்டுமொத்தமாக தோ்தலையும் பாதிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கேரளத்தில் இடதுசாரிகளுக்கு ஆதரவாக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்- காங்கிரஸ் அதிருப்தி

காரைக்கால் தெற்குத் தொகுதியில் திமுக வேட்பாளரை எதிா்த்து காங்கிரஸ் வேட்பாளா் போட்டி!
ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் தலைவா் கே.சி. தியாகி ராஷ்ட்ரீய லோக் தளத்தில் இணைந்தாா்!

11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்!
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


