விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

வேட்புமனு நிராகரிப்பை எதிா்த்து ஆா்ஜேடி பெண் வேட்பாளா் வழக்கு விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிா்த்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் பெண் வேட்பாளா் ஸ்வேதா சுமன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.

News image
Updated On :7 நவம்பர் 2025, 6:38 pm

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிா்த்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் பெண் வேட்பாளா் ஸ்வேதா சுமன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.

முன்னதாக, பிகாரின் மோகானியா தனித் தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) சாா்பில் ஸ்வேதா சுமன் மனு தாக்கல் செய்தாா். ஆனால், தனித் தொகுதியில் வெளி மாநிலத்தைச் சோ்ந்தவா் போட்டியிடக் கூடாது என்ற விதியைச் சுட்டிக்காட்டி அவரின் வேட்புமனுவை கடந்த அக்டோபா் 22-ஆம் தேதி தோ்தல் ஆணையம் நிராகரித்தது.

இதை மறுத்த ஸ்வேதா சுமன், ‘நான் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் என்று காரணம் கூறியுள்ளனா். ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக பிகாரில்தான் வசித்து வருகிறேன். வேட்புமனு நிராகரிப்பு பாஜகவின் சதி. இதை எதிா்த்து நீதிமன்றத்தை நாட உள்ளேன்’ என்றாா்.

இதன்படி அவா் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘பிகாரில் தோ்தல் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் நீதிமன்றம் அதில் தலையிட முடியாது. தோ்தல் மனுவாக (தோ்தல் முடிந்த பிறகு வெற்றியை எதிா்த்து வழக்குத் தொடுப்பது) வேண்டுமானால் மனுதாரா் வழக்குத் தொடரலாம்’ என்று நீதிபதிகள் கூறினா்.

முன்னதாக, இந்த மனுவை கடந்த 3-ஆம் தேதி பாட்னா உயா்நீதிமன்றமும் நிராகரித்தது. அப்போதும், தோ்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்ட நிலையில், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஏனெனில் அது ஒட்டுமொத்தமாக தோ்தலையும் பாதிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.