தொழில் துறை அமைச்சரின்றி முதல்வர் விஜய் லண்டன் பயணம்: நயினார் நாகேந்திரன் கேள்வி!தொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

தேடப்பட்டு வந்த கேங்ஸ்டர்ஸ் இருவர் வெளிநாடுகளில் கைது!

பாதுகாப்பு அமைப்பால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த மோசமான குற்றவாளிகள் இருவர் அமெரிக்கா, ஜார்ஜியா நாடுகளில் கைது

பிரதிப் படம்

Published On :

இந்திய பாதுகாப்பு அமைப்பால் தேடப்பட்டு வந்த ரௌடி கும்பல் தலைவர்களான வெங்கரேஷ் கார்க், பானு ராணா இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ஹரியாணாவில் நாராயன்கரில் வசித்துவந்த வெங்கடேஷ் கார்க் மீது 10-க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் உள்ளன. இவர் ஹரியாணா, ராஜஸ்தான், தில்லி உள்பட வட இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் இளைஞர்களை குற்றச் சம்பவங்களில் ஈடுபடுத்தி வந்தார்.

அதுமட்டுமின்றி, குருகிராமில் பகுஜன் சமாஸ் கட்சித் தலைவரை கொலை செய்துவிட்டு, ஜார்ஜியாவுக்கு வெங்கரேஷ் கார்க் தப்பியோடினார்.

ஜார்ஜியாவிலும், மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலை வழிநடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், வெங்கடேஷ் கார்க்கை போலீஸார் கைது செய்தனர்.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய பானு ராணா, நீண்ட காலமாக குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ராணாவின் குற்றவியல் வலையமைப்பானது ஹரியாணா, பஞ்சாப், தில்லி வரையில் நீள்கிறது.

பஞ்சாபில் கையெறி குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில்தான், ராணாவின் பெயர் வெளியானது. இந்த நிலையில்தான், அமெரிக்காவுக்கு தப்பியோடிய பானு ராணாவை போலீஸார் கைது செய்தனர்.

Summary

India’s most wanted gangsters Venkatesh Garg, Bhanu Rana arrested abroad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.