புது தில்லி: தேசிய தலைநகர் புது தில்லி, இன்று காலை விடியும்போதே, கரும்புகை மண்டலம் சூழ்ந்துதான் காணப்பட்டது.
கடுமையான காற்று மாசு காரணமாக மக்கள் மூச்சு விட முடியாமலும், தொடர் இருமலுடனும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். கடந்த ஒரு சில நாள்களாகவே, புது தில்லியின் காற்று மாசு அளவு கடும் மோசம் என்ற அளவிலேயே நீடிக்கிறது.
காலை வேளையில், மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு கரும் புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில், புது தில்லியில் மக்கள் வீடுகளில் வைத்திருக்கும் காற்று சுத்திகரிப்பானை சுத்தம் செய்யும் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.
அதில், காற்று சுத்திகரிப்பானின், வடிகட்டிப் பகுதியில் மிகத் தடிமனான தூசுப் படலம் படர்ந்து உள்ளது. அதனை மக்கள் கைகளால் பிய்த்து எடுத்து வெளியேற்றுகிறார்கள். இது சுவாசிக்கும் காற்றில் இருக்கும் மாசின் அளவை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு விடியோவில், வடிகட்டியே தெரியாத அளவுக்கு மிகத் தடிமனான தூச ஒட்டிக் கொண்டிருக்கிறது. இதனைப் பார்ப்பவர்கள் பலரும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே பல பகுதிகளில் மக்கள் சுத்தமான காற்று வேண்டும் என்று கோரி போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பல இடங்களில் மக்களை காவல்துறையினர் கட்டுப்படுத்த முடியாமல் கைது செய்யும் நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன.
ஒரு நாளில் காற்று சுத்திகரிப்பான் நிலையே இப்படியாகிறது என்றால், அந்தக் காற்றை சுவாசிக்கும் மனிதர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Summary
Videos of air purifiers being installed in homes in Delhi are going viral.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2027 முதல் தில்லியில் மின்சார ஆட்டோக்கள்தான்! பிற நகர்களுக்கும் தொடருமா?

அரசு தொகுப்பு வீடுகளில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

தில்லியில் போட்டியிட்டிருந்தால் 10 லட்சம் வாக்குகள்..! - இந்திய பயணத்தை நினைவுகூர்ந்த இத்தாலி பிரதமர்!







