அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பிகாரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பிகாரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
- கோப்புப்படம்.
Updated On :10 நவம்பர் 2025, 5:08 am

இணையதளச் செய்திப் பிரிவு

பிகாரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரின் சரண் மாவட்டத்தில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் மூன்று குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். மனாஸ் கிராமத்தில் உள்ள தங்கள் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.45 மணியளவில் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் மூன்று குழந்தைகள் உள்பட குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். தகவல் கிடைத்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்டனர். பின்னர் அவை உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன என்று சரண் மூத்த காவல் கண்காணிப்பாளர் குமார் ஆஷிஷ் திங்களன்று பிடிஐயிடம் தெரிவித்தார்.

பலியானவர்கள் அடையாளங்கள் கண்டறியப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார். வீட்டு 30 ஆண்டுக்கு மேல் பழைமையுடையது என்றும் அதன் நிலை மோசமடைந்திருந்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இந்த பகுதி பாட்னா வருவாய் மாவட்டத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.

பலியானவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்குவதற்காக, சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு போலீஸ் அனுப்பியுள்ளதாக அந்த அதிகாரி கூறினார். வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

summary

Five members of a family, including three children, were killed after the roof of their house collapsed in Bihar's Saran district, police said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.