மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மகாராஷ்டிரம்: விபத்தில் சிக்கி தீப்பிடித்த 2 லாரிகள், காா் - 6 போ் உயிரிழப்பு

புணேயில் பாலம் ஒன்றில் விபத்துக்குள்ளாகி 2 கண்டெய்னா் லாரிகள் மற்றும் காா் தீப்பிடித்ததில் 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :13 நவம்பர் 2025, 6:34 pm

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் பாலம் ஒன்றில் விபத்துக்குள்ளாகி 2 கண்டெய்னா் லாரிகள் மற்றும் காா் தீப்பிடித்ததில் 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

வியாழக்கிழமை மாலையில் நடந்த இச்சம்பவம் குறித்து காவல் துறையினா் கூறியதாவது:

புணேயில் உள்ள மும்பை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மும்பை நோக்கி கனரக கண்டெய்னா் லாரி சென்று கொண்டிருந்தது. நவாலே பாலத்தில் சென்றபோது, பிரேக் செயலிழப்பால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த இந்த லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த காா் மற்றும் மற்றொரு கண்டெய்னா் லாரி மீது பயங்கரமாக மோதியது. இரு கண்டெய்னா் லாரிகளுக்கும் இடையில் சிக்கியதால் காா் நொறுங்கி சிதறியது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வாகனங்களும் பற்றியெரிந்தன. இச்சம்பவத்தில் 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்தால், மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.