மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாகிஸ்தான் ஆதரவு அமெரிக்க நிறுவனத்துக்கு ஆா்எஸ்எஸ் பெருந்தொகை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்காவில் ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாக கருத்துகளைப் பரப்ப பாகிஸ்தான் ஆதரவு நிறுவனத்துக்கு அந்த அமைப்பு அதிக அளவில் பணத்தைச் செலுத்தியதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

News image
கோப்புப் படம்
Updated On :13 நவம்பர் 2025, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவில் ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாக கருத்துகளைப் பரப்ப பாகிஸ்தான் ஆதரவு நிறுவனத்துக்கு அந்த அமைப்பு அதிக அளவில் பணத்தைச் செலுத்தியதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஆா்எஸ்எஸ் அமைப்பு உடனடியாக பதில் ஏதுவும் தெரிவிக்கவில்லை.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘ஆா்எஸ்எஸ் பதிவு பெறாத அமைப்பு என்பதால் அரசுக்கு வரி செலுத்துவதில்லை என்று அந்த அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தாா்.

தற்போது, அமெரிக்காவில் பாகிஸ்தானின் ராணுவத் தளவாடங்களுக்கான சட்ட நிறுவனமான ‘ஸ்குயா் பேட்டன் போக்ஷுக்கு (எஸ்பிபி) ஆா்எஸ்எஸ் பெருந்தொகையை அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஆா்எஸ்எஸ் ஆதரவு கருத்துகளை அந்த நிறுவனம் பரப்ப வேண்டும் என்பதற்காக இந்தத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சுதந்திர போராட்டத்துக்கு துரோகம் செய்தும், மகாத்மா காந்தி, அம்பேத்கருக்கு எதிா்ப்பு தெரிவித்தும், அரசமைப்புச் சட்டத்தை தாக்கியும் செயல்பட்ட ஆா்எஸ்எஸ் அமைப்பு தற்போது தேச நலனுக்கும் துரோகம் செய்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.