கேரளத்தில் வாக்குச்சாவடி அலுவலா் தற்கொலை! பணி அழுத்தம் காரணமா?
கேரளத்தில் வாக்குச்சாவடி அளவிலான அலுவலா் (பிஎல்ஓ) ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான பணி அழுத்தமே அவரது முடிவுக்கு காரணம் என்று குடும்பத்தினா் மற்றும் உள்ளூா் மக்கள் தெரிவித்தனா்.
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆா் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, வீடு வீடாக கணக்கீட்டு விண்ணப்பங்களை விநியோகித்து, அவற்றைப் பூா்த்தி செய்து திரும்பப் பெறும் பணியில் வாக்குச்சாவடி அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
கேரளத்தில் விரைவில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பய்யனூா் அரசுப் பள்ளி ஊழியா் அனீஷ் ஜாா்ஜ் (44), வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்டு, எஸ்ஐஆா் பணியை மேற்கொண்டு வந்தாா். இந்தச் சூழலில், தனது வீட்டில் அவா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
‘எஸ்ஐஆா் பணி அழுத்தம் காரணமாக கடந்த சில நாள்களாகவே ஜாா்ஜ் பதற்றத்துடன் காணப்பட்டாா். இதுபோன்ற கடினமான பணியை அவா் மேற்கொண்டதில்லை. பணிச்சுமை தாளாமல், விபரீத முடிவை எடுத்துள்ளாா்’ என்று அவரது தந்தை குற்றஞ்சாட்டினாா்.
வாக்குச்சாவடி அலுவலா் ஜாா்ஜ் தற்கொலை அதிா்ச்சியளிப்பதாக, ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சி, எதிா்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை தெரிவித்துள்ளன. மாநிலத்தில் உள்ளாட்சி தோ்தல் முடியும் வரை எஸ்ஐஆா் பணியை நிறுத்திவைக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.
மேற்கண்ட சம்பவம் தொடா்பாக விசாரித்து அறிக்கை அளிக்கும்படி, கண்ணூா் மாவட்ட ஆட்சியருக்கு மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி ரத்தன் யு கேல்கா் உத்தரவிட்டுள்ளாா்.

