பிகார் தேர்தலுக்காக உலக வங்கியின் நிதியை முதல்வர் நிதிஷ் குமார் பயன்படுத்தியதாக ஜன்சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிகார் தேர்தல் குறித்து செய்தியாளர்களுடன் பிரசாந்த் கிஷோர் பேசுகையில், ``இந்தத் தேர்தலின் முடிவுகள் திறம்பட விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. ஜூன் மாதம் முதல் தேர்தல் அறிவிப்பு வரையில், மக்களின் வாக்குகளை வாங்குவதற்கு நிதிஷ் குமார் அரசால் ரூ. 40,000 கோடி செலவிடப்பட்டுள்ளது.
பிகாரில் தற்போதைய பொதுக் கடன் ரூ. 4.06 லட்சம் கோடி; ஒரு நாளைக்கு வட்டி ரூ. 63 கோடி. ஆனால், பிகார் கருவூலம் தற்போது காலியாக உள்ளது.
உலக வங்கியிலிருந்து பிகாரின் வேறுசில திட்டங்களுக்காகப் பெறப்பட்ட ரூ. 21,000 கோடியிலிருந்துதான் பிகார் பெண்களுக்கு ரூ. 10,000 வழங்கப்பட்டது. தேர்தல் ஒழுக்க நெறிகள் அமலுக்கு வருவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாகத்தான் ரூ. 21,000 கோடியில் ரூ. 14,000 கோடி எடுக்கப்பட்டு, 1.25 கோடி பெண்களுக்கு ரூ. 10,000 தொகை விநியோகிக்கப்பட்டது.
பிகாரின் பொருளாதாரம் இவ்வளவு பெரிய தொகையை மீட்டெடுக்க முடியாது. தற்போது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, பொது நலனுக்காக செலவிட இப்போது எந்தப் பணமும் இல்லை. பொது நிதியைப் பயன்படுத்திதான், அவர்கள் மக்களின் வாக்குகளை வாங்கியுள்ளனர்.
இவையனைத்து எங்கள் தகவல், அது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால், அதுவே உண்மையாக இருந்தால்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... நீதி என்பது யாதெனில்…
Summary
Rs 14,000 crore World Bank funds used in Bihar polls: Jan Suraaj Leader Prashant Kishor's big claim
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடந்த 2025-26 நிதியாண்டில் ரெப்கோ வங்கி வா்த்தகம் ரூ.25,246 கோடி

ரெப்கோ வங்கி சாா்பில் தாயகம் திரும்பியோருக்கு ரூ. 1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

சந்தை மதிப்பில் 2-ஆவது இடம்: எச்டிஎஃப்சி வங்கி-ஏா்டெல் இடையே கடும் போட்டி

பிகார் அமைச்சரவை விரிவாக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!
விடியோக்கள்

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly




