மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

செளதி பேருந்து விபத்து: பலியான இந்தியர்கள் குடும்பத்துக்கு உதவ தூதரகத்துக்கு உத்தரவு! - ஜெய்சங்கர்

செளதி பேருந்து விபத்தில் பலியான இந்தியர்களின் குடும்பங்களுக்கு உதவ உத்தரவிட்டிருப்பது பற்றி...

News image
ஜெய்சங்கர்
Updated On :17 நவம்பர் 2025, 5:58 am

இணையதளச் செய்திப் பிரிவு

செளதி அரேபியா பேருந்து விபத்தில் பலியான இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தூதரகங்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து செளதி அரேபியாவுக்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் பயணித்த பேருந்து மதீனாவுக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு டீசல் டேங்கர் லாரி மீது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 42 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

இந்த நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“மதீனாவில் இந்தியர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ரியாத் தூதரகம் மற்றும் ஜெட்டா துணைத் தூதரகம் முழு ஆதரவு அளித்து வருகின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெட்டா துணைத் தூதரகம் வெளியிட்டிருக்கும் பதிவில், 24 மணிநேர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை அறிய 8002440003 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

பாதிக்கட்டவர்கள் பெரும்பாலானோர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தெலங்கானா அரசும் கட்டுப்பாட்டு மையம் அமைத்து ஒருங்கிணைத்து வருகின்றது.

summary

Saudi bus accident: Embassy ordered to help families of Indian victims! - Jaishankar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.