புணேவில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர்கள் மீது ரயில் மோதியதில் 3 இளைஞர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள மஞ்சரி பகுதி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஐந்து முதல் ஆறு இளைஞர்கள் தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.
அவர்களில் 2 பேர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் 3 இளைஞர்கள் பலியாகினர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் அவர்கள் மூவரை ரயில் மோதியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த இளைஞர் மஞ்சரியில் அருகிலுள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர்.
நாங்கள் விபத்து மரணம் தொடர்பான வழக்கைப் பதிவு செய்துள்ளோம்.
மேலும் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு தெரிவித்தார். 3 இளைஞர்கள் ரயில் மோதி பலியான நிகழ்வு மஞ்சரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Three persons suspected to be engaged in mischief along a railway track in Pune were killed after being run over by a train, police said on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில் மோதியதில் தண்டவாளத்தில் தூங்கிய இளைஞா் உயிரிழப்பு

உ.பி.யில் ரயில் தண்டவாளத்தில் மல்யுத்த வீரர் சடலம்!

ஆந்திரம்: குரங்குகள் கூட்டமாக தாக்கியதில் மூதாட்டி பலி!

கர்நாடகம்: கார் தீப்பிடித்ததில் முதியவர் பலி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


