மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புணேவில் ரயில் மோதியதில் 3 இளைஞர்கள் பலி

புணேவில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர்கள் மீது ரயில் மோதியதில் 3 இளைஞர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப் படம்.

Updated On :17 நவம்பர் 2025, 6:41 am

புணேவில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர்கள் மீது ரயில் மோதியதில் 3 இளைஞர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள மஞ்சரி பகுதி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஐந்து முதல் ஆறு இளைஞர்கள் தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.

அவர்களில் 2 பேர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் 3 இளைஞர்கள் பலியாகினர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் அவர்கள் மூவரை ரயில் மோதியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த இளைஞர் மஞ்சரியில் அருகிலுள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர்.

நாங்கள் விபத்து மரணம் தொடர்பான வழக்கைப் பதிவு செய்துள்ளோம்.

மேலும் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு தெரிவித்தார். 3 இளைஞர்கள் ரயில் மோதி பலியான நிகழ்வு மஞ்சரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Three persons suspected to be engaged in mischief along a railway track in Pune were killed after being run over by a train, police said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.