தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

புணேவில் ரயில் மோதியதில் 3 இளைஞர்கள் பலி

புணேவில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர்கள் மீது ரயில் மோதியதில் 3 இளைஞர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப் படம்.

Updated On :17 நவம்பர் 2025, 12:11 pm IST

புணேவில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர்கள் மீது ரயில் மோதியதில் 3 இளைஞர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள மஞ்சரி பகுதி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஐந்து முதல் ஆறு இளைஞர்கள் தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.

அவர்களில் 2 பேர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் 3 இளைஞர்கள் பலியாகினர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் அவர்கள் மூவரை ரயில் மோதியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த இளைஞர் மஞ்சரியில் அருகிலுள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர்.

நாங்கள் விபத்து மரணம் தொடர்பான வழக்கைப் பதிவு செய்துள்ளோம்.

மேலும் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு தெரிவித்தார். 3 இளைஞர்கள் ரயில் மோதி பலியான நிகழ்வு மஞ்சரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Three persons suspected to be engaged in mischief along a railway track in Pune were killed after being run over by a train, police said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.