எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

புணேவில் ரயில் மோதியதில் 3 இளைஞர்கள் பலி

புணேவில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர்கள் மீது ரயில் மோதியதில் 3 இளைஞர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப் படம்.
Updated On :17 நவம்பர் 2025, 6:41 am

இணையதளச் செய்திப் பிரிவு

புணேவில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர்கள் மீது ரயில் மோதியதில் 3 இளைஞர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள மஞ்சரி பகுதி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஐந்து முதல் ஆறு இளைஞர்கள் தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.

அவர்களில் 2 பேர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் 3 இளைஞர்கள் பலியாகினர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் அவர்கள் மூவரை ரயில் மோதியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த இளைஞர் மஞ்சரியில் அருகிலுள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர்.

நாங்கள் விபத்து மரணம் தொடர்பான வழக்கைப் பதிவு செய்துள்ளோம்.

மேலும் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு தெரிவித்தார். 3 இளைஞர்கள் ரயில் மோதி பலியான நிகழ்வு மஞ்சரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

summary

Three persons suspected to be engaged in mischief along a railway track in Pune were killed after being run over by a train, police said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.