சென்னை மத்திய சிறையில் ஏற்பட்ட வன்முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்ட துணை சிறை அலுவலர் எஸ். ஜெயக்குமாரின் 26-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
சென்னை மத்திய சிறையில் கடந்த 1999ஆம் ஆண்டு நவ.17ஆம் தேதி கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்றபோது துணை சிறை அலுவலர் எஸ். ஜெயக்கு மார் கைதிகளால் தாக்கப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.
இவருடன் 9 கைதிகளும் கொல்லப்பட்ட னர். இதையடுத்து, சிவகங்கையில் இவருக்கு சொந்த இடத்தில் குடும்பத்தினரால் நினைவிடம் அமைக்கப்பட்டது.
இங்கு, ஆண்டுதோறும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், சிறைத்துறையினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இவர் இறந்து 26 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சிவகங்கையிலுள்ள அவரது நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மரியாதை செலுத்தினர்.
மேலும், சிவகங்கை ஓய்வு பெற்ற சிறைத்துறை அலுவலர்களும், அப்பகுதி பொதுமக்களும் மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, அவரது குடும்பத்தினர் சார்பில் காரைக்குடியில் கோயில் வாசலில் எளியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
Summary
The 26th anniversary memorial event for Deputy jailer S. Jayakumar who was burned to death during violence at Chennai Central Prison was held on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண் தற்கொலை வழக்கில் கணவா், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை!

ரூ.5 கோடி போதைப் பொருள் கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 33 ஆண்டு சிறை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


