தில்லி கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டிருக்கும் பெண் டாக்டர் ஷாஹீன், மற்றொரு டாக்டர் முஸாமில் ஆகியோர் ரொக்கமாகக் கொடுத்து புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஃபரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்திலிருந்து அந்த காரை தேசிய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய காரை, கடந்த செப்டம்பர் மாதம் ஷாஹீன் மற்றும் முஸாமில் ஆகியோர் ரொக்கமாகக் கொடுத்து வாங்கியதாகவும், காரை வாங்கும்போது எடுத்தப் புகைப்படங்கள் வெளியாகியிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த கார், டாக்டர் ஷாஹீன் ஷாஹித் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் செப்டம்பர் மாதம்தான் இந்த புதிய கார் வாங்கப்பட்டுள்ளதும், விசாரணை அதிகாரிகளுக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
ஏற்கனவே, தில்லி செங்கோட்டைப் பகுதியில் ஐ20 வகை கார் குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பயங்கரவாதிகள் வாங்கியிருந்த சிவப்பு நிறக் காரும் ஃபரிதாபாத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், பல்கலைகழகத்திலிருந்து இந்தக் காரும் பறிதல் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய விசாரணையில், இந்த பயங்கரவாத கும்பல், நவம்பர் 25ஆம் தேதி ராமர் கோயிலில் கொடியேற்றத்தின்போது அயோத்தியாவில் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அம்மோனியம் நைட்ரேட், ஆர்டிஎக்ஸ் ஆகியவற்றை இவர்கள் சேகரித்து சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டாலும், தில்லி குண்டு வெடிப்பின்போது பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த பயங்கரவாத சதித் திட்டம் 2022ஆம் ஆண்டு துருக்கியிலிருந்து தீட்டப்பட்டிருக்கலாம் என்றும், துருக்கியிலிருந்து செயல்படும் பயங்கரவாதத் தலைவரின் கீழ் உமர் செயல்பட்டிருக்கலாம் என்றும், அவரது குறியீட்டுப் பெயர் உகாசா என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
Summary
It is reported that Shaheen, the female doctor arrested in the Delhi blast case, bought a car in cash from Muzammil.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: பெண் பலத்த காயம்
பி.எம்.எல்.ஏ. வழக்கில் சித்திக்கியின் இடைக்கால பிணை கோரும் மனு மீது விசாரணை ஏப்.11-க்கு ஒத்திவைப்பு

பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதல்: 5 பேர் பலி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


