2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

பயங்கரவாதத் தொடர்பு! அல் - பலாஹ் பல்கலை பேராசிரியர்கள், உள்ளூர் மக்கள் பலர் மாயமானது ஏன்?

பயங்கரவாதத் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்ட பின், அல் - பலாஹ் பல்கலை பேராசிரியர்கள், உள்ளூர் மக்கள் பலர் காணாமல் போயிருப்பதாகத் தகவல்.

அல் - பலாஹ் பல்கலை - ANI

Published On :

ஹரியாணா மாநிலம் பரிதாபாத்தில் அமைந்துள்ள அல் - பலாஹ் பல்கலையின் பேராசிரியர்கள் சிலருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றிய பல பேராசிரியர்கள், ஊழியர்கள், உள்ளூர் மக்கள் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.

பல்கலையின் அனைத்துப் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து கண்டறிய ஹரியாணா காவல்துறைக்கு, டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

நவம்பர் மாத தொடக்கத்தில், அல் பலாஹ் பல்கலையில் பேராசிரியர்களாக இருந்த சிலர், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், நவ.10ஆம் தேதி தில்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தற்கொலைப் படையாக செயல்பட்ட உமர் நபி, இந்தப் பல்கலையின் பேராசிரியர் என்பதும் தெரிய வந்தது.

இந்த நிலையில்தான், தில்லி செங்கோட்டைப் பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு, பல்கலையில் பணியாற்றி வந்த பேராசிரியர்கள் சிலரும், அந்த பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் வாழ்ந்து வந்த சிலரும், எங்கே சென்றார்கள் என்பது தெரியாமல் மாயமாகியிருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

பல்கலைக்கழகத்துக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் பேராசிரியர்கள் தலைமறைவாகியிருக்கிறார்கள். அந்த பல்கலை அமைந்துள்ள கிராமத்தைச் சேர்ந்த சிலரும் காணாமல் போயிருக்கிறார். அவர்களை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பல்கலையின் பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள்தான் கைது செய்யப்பட்டிருக்கும் மருத்துவர்கள் ஷாஹீன் ஷாஹித், முஸாமில் அகமது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

After the terrorist connection was discovered, several professors from Al-Falah University and local residents were reported missing.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.