ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ஜார்க்கண்டில் பாம்பு விஷம் கடத்திய கும்பல் பிடிபட்டது: ரூ.80 கோடி விஷம் பறிமுதல்

ஜார்க்கண்டில் சோதனையின்போது பாம்பு விஷம் கடத்திய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

News image

பாம்பு - கோப்புப்படம்.

Updated On :21 நவம்பர் 2025, 5:16 pm IST

ஜார்க்கண்டில் சோதனை ஒன்றின்போது பாம்பு விஷம் கடத்திய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தில் புதன்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் பாம்பு விஷம் கடத்திய கும்பலை வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் வனத்துறையின் கூட்டுக் குழு கண்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த கும்பலைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்ததாக அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

சோதனையில் இந்தக் குழுவிடமிருந்து சுமார் 1,200 கிராம் பாம்பு விஷத்தையும் 2.5 கிலோ எறும்பு தின்னி செதில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். முதியவர் மற்றும் அவரது மகன் உள்பட கைதான 3 பேரும் புதன்கிழமை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த மோசடியில் மேலும் பலர் ஈடுபட்டிருக்கலாம், சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மெதினிநகர் மாவட்ட வன அதிகாரி சத்யம் குமார் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட விஷத்தின் மதிப்பு சுமார் ரூ.80 கோடி, அதே நேரத்தில் எறும்பு தின்னி செதில்களின் மதிப்பு ரூ.15-20 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தைக் கொண்டு மருந்துகள் தயாரிக்கப்படுவதால் அதன் விஷத்துக்கு சர்வதேச சந்தையில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

Summary

A joint team of the Wildlife Crime Control Bureau and the Forest Department claimed to have busted a snake venom smuggling racket in Jharkhand's Palamu district, and arrested three persons for their alleged involvement, an official said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.