தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கேரளத்தில் விபத்தில் சிக்கிய மணப்பெண்: மருத்துவமனையில் நடைபெற்ற திருமணம்

கேரளத்தில் மணப்பெண் விபத்தில் சிக்கியதால் மருத்துவமனையில் வைத்து திருமணம் நடைபெற்றிருப்பது கவனம் பெற்றுள்ளது.

News image

திருமணம்

கோப்புப்படம்

Updated On :21 நவம்பர் 2025, 4:23 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கேரளத்தில் மணப்பெண் விபத்தில் சிக்கியதால் மருத்துவமனையில் வைத்து திருமணம் நடைபெற்றிருப்பது கவனம் பெற்றுள்ளது.

கேரள மாநிலம், ஆலப்புழாவின் கொம்மடியைச் சேர்ந்த அவனி மற்றும் தம்போலியைச் சேர்ந்த வி.எம். ஷரோன் ஆகியோரின் திருமணம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. முன்னதாக இருவருக்கும் வெள்ளிக்கிழமை நண்பகல் தம்போலியில் திருமணம் நடைபெறவிருந்தது.

மணப்பெண் அலங்காரத்திற்காக அவனி குமரகோமுக்கு பயணித்தபோது ​​அதிகாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இதில் அவர் காயமடைந்தார்.

உள்ளூர்வாசிகள் காயமடைந்தவர்களை கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அவனிக்கு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டதால், சிறப்பு சிகிச்சைக்காக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தகவல் கிடைத்ததும் மணமகன் ஷரோனும் அவரது குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். திருமணத்தை குறிப்பிட்ட நேரத்தில் நடத்த வேண்டும் என இரு குடும்பத்தினரும் முடிவு செய்தனர்.

தங்களின் இந்த விருப்பதை மருத்துவர்களுடன் தெரிவித்து அனுமதியும் பெற்றனர். உடனே அதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை அதிகாரிகள் செய்தனர்.

மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவனி கழுத்தில் மணமகன் ஷரோன் சுப நேரத்தில் தாலி கட்டினார்.

அவனிக்கு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டுள்ளதால் விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று நரம்பியல் அறுவை சிகிச்சைத் தலைவர் மருததுவர் சுதீஷ் கருணாகரன் தெரிவித்தார்.

Summary

In a rare incident, the emergency room of a private hospital turned into a wedding venue after a Thumboli native tied the knot with his bride, who had been injured in a road accident here on Friday, hospital authorities said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.