இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள் முற்போக்கான சீர்திருத்தங்களில் ஒன்று என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில், கடந்த 2020 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 4 புதிய தொழிலாளர் சட்டங்களை இன்று (நவ. 21) முதல் நடைமுறைப்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், இந்தப் புதிய தொழிலாளர் சட்டங்கள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, முன்பு நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களையும் ஒருங்கிணைத்து ஊதியக் குறியீடு, தொழில்துறை குறியீடு, சமூக பாதுகாப்பு குறியீடு, தொழில்துறை பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச் சூழல் குறியீடு எனும் 4 புதிய சட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்தப் புதிய தொழிலாளர் சட்டங்களானது இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து கொண்டுவரப்பட்ட முற்போக்கான சீர்திருத்தங்களில் ஒன்று என பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டதாவது:
“இன்று நமது அரசு நான்கு தொழிலாளர் குறியீடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது சுதந்திரத்திற்குப் பிறகு கொண்டுவரப்பட்ட மிகவும் விரிவான மற்றும் முற்போக்கான தொழிலாளர்கள் சார்ந்த சீர்திருத்தங்களில் ஒன்றாகும். இவை, நமது தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கின்றன” எனக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், இந்தப் புதிய குறியீடுகள் மூலம் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் நேரத்தில் ஊதியம் கிடைப்பது உறுதி செய்யப்படும் எனவும், மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அதிக வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Summary
PM Modi has said that the new labor laws that have come into effect are one of the most progressive reforms brought about after independence.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

51,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார் பிரதமர் மோடி!

இத்தாலியில் பிரதமர் ஜார்ஜியா உடன் மோடி சந்திப்பு - புகைப்படங்கள்

10 கோடி பார்வையாளர்களைக் கடந்த மோடி - மெலோனி விடியோ!

நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



