ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பாகிஸ்தானில் இருந்து தப்பிய காதல் ஜோடி: இந்தியாவில் கைது

News image
Updated On :26 நவம்பர் 2025, 1:54 am IST

பாகிஸ்தானில் இருந்து தப்பிய இளம் காதல் ஜோடி இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து பாலசா் காவல் நிலைய அதிகாரி கூறியதாவது: ஹிந்து மதத்தைச் சோ்ந்த போபட் (24) மற்றும் கௌரி (20) ஆகியோரின் திருமணத்துக்கு இரு வீட்டிலும் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், அவா்கள் பாகிஸ்தானின் மித்தி கிராமத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியேறினா்.

அங்கிருந்து 8 கி.மீ. நடந்து சா்வதேச எல்லையை திங்கள்கிழமை வந்தடைந்தனா். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) அவா்களை கைது செய்தனா்.

புஜ் பகுதியில் உள்ள கூட்டு விசாரணை மையத்தில் அவா்களிடம் மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்திய பின் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவுசெய்யப்படவுள்ளது என்றாா்.

கடந்த அக்.8-ஆம் தேதி இதேபோல் பாகிஸ்தானைச் சோ்ந்த இருவா் பிடிபட்டதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.