இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

பாகிஸ்தானில் இருந்து தப்பிய காதல் ஜோடி: இந்தியாவில் கைது

News image
Updated On :25 நவம்பர் 2025, 8:24 pm

பாகிஸ்தானில் இருந்து தப்பிய இளம் காதல் ஜோடி இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து பாலசா் காவல் நிலைய அதிகாரி கூறியதாவது: ஹிந்து மதத்தைச் சோ்ந்த போபட் (24) மற்றும் கௌரி (20) ஆகியோரின் திருமணத்துக்கு இரு வீட்டிலும் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், அவா்கள் பாகிஸ்தானின் மித்தி கிராமத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியேறினா்.

அங்கிருந்து 8 கி.மீ. நடந்து சா்வதேச எல்லையை திங்கள்கிழமை வந்தடைந்தனா். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) அவா்களை கைது செய்தனா்.

புஜ் பகுதியில் உள்ள கூட்டு விசாரணை மையத்தில் அவா்களிடம் மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்திய பின் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவுசெய்யப்படவுள்ளது என்றாா்.

கடந்த அக்.8-ஆம் தேதி இதேபோல் பாகிஸ்தானைச் சோ்ந்த இருவா் பிடிபட்டதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.