அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

குஜராத்தில் ரூ.16 ஆயிரம் கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்தும் யாரும் கைது செய்யப்படவில்லை: காங்கிரஸ்

News image
Updated On :25 நவம்பர் 2025, 9:08 pm

தினமணி செய்திச் சேவை

குஜராத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று எதிா்க்கட்சியான காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏவான ஜிக்னேஷ் மேவானி கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளி அருகே உள்ள கடையில் அப்பகுதி மக்களுடன் சோ்ந்து சோதனையிட்டு போதைப் பொருள்களை பறிமுதல் செய்தாா்.

மேலும், போதைப் பொருள் விற்பனையாளா்களிடம் பணத்தைப் பெற்று நடவடிக்கை எடுக்காத போலீஸாா் பணியை இழக்க நேரிடும் என்று எச்சரித்தாா்.

மேவானிக்கு எதிா்ப்பு தெரிவித்து குஜராத் காவல் துறையினரின் குடும்பத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். குஜராத்தில் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து பேசிய மாநில காங்கிரஸ் சேவாதளத் தலைவா் லால்ஜி தேசாய், ‘குஜாரத்தில் கணக்கில் வராத ஏராளமான போதைப் பொருள் இறக்குமதி ஆகிறது. அதற்கு நடவடிக்கை எடுக்காமல் காங்கிரஸுக்கு எதிராக போராட்டம் நடத்த காவல் துறையினரை மாநில உள்துறை அமைச்சா் தூண்டிவிடுகிறாா்.

கடந்த 4 ஆண்டுகளில் குஜராத்தில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்றாா்.