தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

உத்தரப் பிரதேசம்: ஓநாய் தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

உத்தரப் பிரதேசத்தியல் ஓநாய் தாக்கியதில் 5 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

ஓநாய் - ENS

Updated On :29 நவம்பர் 2025, 11:58 am

உத்தரப் பிரதேசத்தியல் ஓநாய் தாக்கியதில் 5 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள கைசர்கஞ்சில் வசிப்பவர் ரோஷன் குமாரின் மகன் ஸ்டார். இச்சிறுவன் வெள்ளிக்கிழமை மாலை தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த 2 ஓநாய்கள் சிறுவனை தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் பலியானான் என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து கிராமவாசிகள் கூறுகையில், ஓநாய்களில் ஒன்று சிறுவனைப் பிடித்து இழுத்துச் சென்றது. அக்கம்பக்கத்தினர் எச்சரிக்கை எழுப்பி குச்சிகள் மற்றும் கம்பிகளால் விலங்குகளைத் துரத்தினர். பிறகு வயலில் பலத்த காயமுற்று மயக்கமடைந்த நிலையில் கிடந்த சிறுவனை அவர்கள் கண்டனர். சிறுவன் முதலில் கைசர்கஞ்சில் உள்ள சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான்.

அவனது நிலை மோசமடைந்ததால், லக்னௌவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டான். ஆனால் வழியில் இறந்தான் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தும் வகையில், வன அதிகாரி ராம் சிங் யாதவ், வெள்ளிக்கிழமை மாலை ககாரா நதிக்கு அருகில் அமைந்துள்ள மல்லஹான் புர்வா கிராமத்தின் கரும்பு வயல்களுக்கு அருகில் சிறுவன் தாக்கப்பட்டான்.

குழந்தை கிடந்த இடத்தில் ஓநாய் ஒன்றின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. சிறப்பு குழுக்கள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கிராமத்திற்கு அருகில் மூன்று கூண்டு பொறிகள் அமைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 9 முதல் கைசர்கஞ்ச் மற்றும் மஹ்சி வட்டங்களில் ஓநாய் தாக்குதல்களில் 7 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியானதாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Summary

A five-year-old boy has died in Kaisarganj – a tehsil in Uttar Pradesh's Bahraich district that has witnessed a spate of wolf attacks of late – from injuries sustained in an attack by the animal, officials said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.