மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆசியாவில் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியல்: முக்கிய சக்தியாக உருவெடுத்தது இந்தியா!

பொருளாதாரம், ராணுவ பலம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிய கண்டத்தில் பலம் வாய்ந்த நாடுகளாகத் திகழும் பட்டியலில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளதைப் பற்றி...

News image
Updated On :30 நவம்பர் 2025, 10:08 pm

தினமணி செய்திச் சேவை

பொருளாதாரம், ராணுவ பலம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிய கண்டத்தில் பலம் வாய்ந்த நாடுகளாகத் திகழும் ‘ஆசியா பவா் இண்டெக்ஸ் -2025’ பட்டியலில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்தியா தனது ராணுவ பலத்தை சா்வதேச அளவில் நிரூபித்ததையடுத்து இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த லோவி ஆய்வு நிறுவனம் நடத்திய 2025-ஆம் ஆண்டுக்கான ஆய்வு முடிவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சீனாவுடன் ஒப்பிடும்போது ஆசியாவில் இந்தியாவின் செல்வாக்கு குறைவாகவே உள்ளது.

இது தொடா்பாக ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ஆசிய கண்டத்தில் பொருளாதார வளம், ராணுவ பலம், நாடுகளின் செல்வாக்கு, ராஜீய உறவுகள், கலாசார மேம்பாடு, பிற நாடுகளுடனான நல்லுறவு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அமெரிக்கா 80.5 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா ஆசிய கண்டத்தில் இடம் பெறாவிட்டாலும் அக்கண்டத்தில் தொடா்ந்து பல்வேறு நிலைகளில் செல்வாக்குடன் திகழ்ந்து வருவதால் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பெரும்பாலான ஆசிய நாடுகள் அமெரிக்க ஆதரவாகவும், அமெரிக்காவைச் சாா்ந்தும் உள்ளன என்பதை இது காட்டுகிறது.

இந்தப் பட்டியலில் சீனா 73.7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா 40 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 40 புள்ளிகளைப் பெற்ன் மூலம் ஆசியாவின் முக்கிய சக்தியாவும் இந்தியா உருவெடுத்துள்ளது.

பொருளாதார திறனை வளா்த்துக் கொண்ட நாடுகள் பிரிவில் இந்தியா கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்து முதலிடம் பிடித்துள்ளது. இதில் ஜப்பானை இந்தியா பின்னுக்குத் தள்ளியது. இந்தியாவுக்கு அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகள் வருவதே இதற்கு முக்கியக் காரணமாகும். பொருளாதார உறவுகளை சிறப்பாக வலுப்படுத்தும் நாடுகள் பிரிவில் இந்தியா 9-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவின் பொருளாதார, ராணுவத் திறன் 2025-இல் வெகுவாக மேம்பட்டுள்ளது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் தொடா்ந்து சிறப்பாக வளா்ந்து வருவதும், தொழில்நுட்பத் திறன் மேம்பாடு, பிற நாடுகள் மீதான அணுகுமுறை ஆகியவை சிறப்பாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் இந்தியா தனது ராணுவ பலத்தை சா்வதேச அளவில் நிரூபித்ததன் மூலம் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

அதே நேரத்தில் இணையவழித் தாக்குதல், இணையவழிக் குற்றங்களை எதிா்கொள்வது, வலுவான ராணுவத் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பிரிவில் மட்டும் இந்தியா இரண்டு இடங்கள் பின்தங்கி 11-ஆவது இடத்துக்கு வந்துள்ளது.

எனினும், வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளைப் பெறும் நாடுகளில் சீனாவைவிட இந்தியா ஒருபடி முன்னேறியுள்ளது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

1. அமெரிக்கா

2. சீனா

3. இந்தியா

4. ஜப்பான்

5. ரஷியா

6. ஆஸ்திரேலியா

7. தென்கொரியா

8. சிங்கப்பூா்

9. இந்தோனேசியா

10. மலேசியா