ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

உத்தரகண்டில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

உத்தரகண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.

News image

மிதமான நிலநடுக்கம்

Updated On :30 நவம்பர் 2025, 11:43 am IST

உத்தரகண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.

உத்தரகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ரிக்டர் அளவில் 3.7 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது 5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

காலை 10:27 மணிக்கு கர்ணபிரயாக், நாராயண்பாக், தாராலி மற்றும் தேவால் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய அவர்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்த் கிஷோர் ஜோஷி கூறுகையில், நிலநடுக்கத்தின் மையம் சாமோலி அருகே இருந்தது.

சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றார். இருப்பினும் நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக உடனடித் தகவல் எதுவும் இல்லை.

Summary

An earthquake of magnitude 3.7 struck the Chamoli district of Uttarakhand on Sunday, as per the National Centre for Seismology.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.