பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

உ.பி.: 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே பலியான 75 வயது முதியவர்!

உத்தரப் பிரதேசத்தில் 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே முதியவர் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
திருமணம் - கோப்புப்படம்.
Updated On :1 அக்டோபர் 2025, 11:42 pm

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரப் பிரதேசத்தில் 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே முதியவர் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள குச்முச் கிராமத்தில் வசித்து வந்தவர் சங்ருராம்(75). இவரின் மனைவி கடந்த ஆண்டு பலியான நிலையில் அவர் தனியாக வசித்து வந்திருக்கிறார். குழந்தை இல்லாததால் விவசாயத்தில் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை நடத்தியுள்ளார். இந்நிலையில் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய ஆசை வந்திருக்கிறது. ஆனால் மறுமணம் செய்ய வேண்டாம் என்று அவருக்கு குடும்பத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இருப்பினும், அதனையும் மீறி சங்ருராம் மறுமணம் செய்துள்ளார். தம்பதியினர் இருவரும் திருமணத்தை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் பதிவு செய்து, பின்னர் உள்ளூர் கோயிலில் பாரம்பரிய சடங்குகளைச் செய்தனர். சங்ருராமை மணந்த மன்பவதிக்கும் இது இரண்டாவது திருமணம். மன்பவதிக்கு ஏற்கெனவே இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். குழந்தைகளை தான் பார்த்துக்கொள்வதாகவும், வீட்டுப் பொறுப்பை மன்பவதி ஏற்க வேண்டும் என்றும் சங்ருராம் தெரிவித்திருக்கிறார்.

பிறகு திருமணம் நடைபெற்ற இரவு அன்று இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். ஆனால் காலையில், சங்ருராமின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். முதியவரின் திடீர் மரணம் கிராமத்தில் ஊகங்களைத் கிளப்பியுள்ளது. தில்லியில் வசிக்கும் சங்ருராமின் மருமகன்கள் இறுதிச் சடங்குகளை நிறுத்தியுள்ளனர்.

தாங்கள் திரும்பும் வரை இறுதிச் சடங்குகள் நடக்கக்கூடாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே போலீஸார் முறையான விசாரணையைத் தொடங்குவார்களா அல்லது உடற்கூராய்வுக்கு உத்தரவிடுவார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. சங்ருராமின் இறப்பிற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

summary

A 75-year-old man in Uttar Pradesh's Jaunpur died unexpectedly the morning after marrying a 35-year-old woman, raising suspicion among his family members.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.