இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியை கண்டு ரசித்தவர்கள் தேசத் துரோகிகள் என்று சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் அந்தப் போட்டியைப் பார்க்கவே இல்லை. அதனால் அதைப்பற்றி பேச விரும்பவில்லை.
நான் ஒரு தேசபக்தன் என்பதால் அந்தப் போட்டியை பார்க்கவில்லை. ஆனால் தேசத் துரோகிகள் அந்தப் போட்டியை கண்டு ரசித்தனர்.
பிகாரில் தேர்தல் நடைபெறவுள்ளதால் பிரதமர் அங்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.10,000 வழங்கினார். பிரதமருக்கு பிகாரிலிருந்து இப்படியான கோரிக்கை வந்ததா?. பிகாருக்கு அவ்வாறு உதவுவதால் பொறாமையும் கிடையாது.
தேர்தல் வருகிறது என்பதற்காக அங்கே நீங்கள் ஏமாற்றுகிறீர்கள்.
ஆனால் மகாராஷ்டிரா நெருக்கடி இருக்கிறது. அதை நீங்கள் முழுமையாக புறக்கணிக்கிறீர்கள். இது முழுமையான அநீதி. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காணாமல் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர் போட்டியை எதிர்த்து போராட்டமும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Shiv Sena (UBT) chief Uddhav Thackeray on Wednesday said that those who are "Deshdrohi" (anti-nationals) have enjoyed the recently held India-Pakistan Asia Cup final, held at Dubai International Stadium.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தோல்வியைக் கண்டு அச்சமில்லை: சீமான்

காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பாஜகவைக் கண்டு அஞ்சுகிறது : கேரள பாஜக

வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு மாரத்தான்

சுகபோகங்களில் மனஞ்செலுத்த மாட்டார்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


