தசரா: பரேலியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு! இணைய சேவைகள் துண்டிப்பு!

உத்தரப் பிரதேசத்தில் 48 மணிநேரத்துக்கு இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது குறித்து...
கோப்புப் படம்
கோப்புப் படம்PTI
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில், தசரா பண்டிகையை முன்னிட்டு பரேலி பிரிவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 48 மணிநேரத்துக்கு இணைய சேவைகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

பரேலி பிரிவில் உள்ள 4 மாவட்டங்களில், தசரா பண்டிகையை முன்னிட்டு, மதக்கலவரம் ஏற்படாமல் தடுக்க, இன்று (அக். 2) மாலை 3 மணி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 3 மணி வரை சுமார் 48 மணிநேரத்துக்கு இணைய மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் துண்டிக்கப்படுவதாக, உத்தரப் பிரதேசத்தின் உள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி, உள் துறை செயலாளர் கௌரவ் தயாள் வெளியிட்டுள்ள உத்தரவில், முகப்புத்தகம், யூடியூப், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகச் செயலிகள் மூலம் வதந்திகள் பரவி மதக்கலவரங்கள் உருவாகக் கூடும் என்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பரேலி பிரிவில் உள்ள மாவட்டங்களின் முக்கிய பகுதிகள் மற்றும் தெருக்கள் முழுவதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு; பாதுகாப்புப் படையினர் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, செப். 26 ஆம் தேதி கொட்வாலி பகுதியில் உள்ள மசூதியின் அருகில் திரண்ட இஸ்லாமியர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் கடுமையான மோதல்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: குளிர்காலம்: பத்ரிநாத் கோயில் நடை மூடப்படுவது எப்போது? அறிவிப்பு

Summary

In Uttar Pradesh, internet services have been temporarily suspended for the next 48 hours in Bareilly division as a precautionary measure ahead of the Dussehra festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com