பிகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலி, ஒருவர் காயம்
பிகாரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பிகாரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரின் புர்னியா மாவட்டத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் வெள்ளிக்கிழமை பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்தனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காயமடைந்ட நபர் சிகிச்சைக்காக புர்னியா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புர்னியா சந்திப்பின் நிலைய மேலாளர் முன்னா குமார் கூறுகையில், கதிஹர்-ஜோக்பானி பிரிவில் அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இருட்டாகவும், வானிலை மேகமூட்டமாகவும் இருந்ததால், சிறுவர்கள் வேகமாக வந்த ரயிலை சரியான நேரத்தில் கவனிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே பலியானோரின் குடுத்தினருக்கு முதல்வர் நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்த நபர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறினார். விபத்தில் பலியானவர்கள் 14-18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், கஸ்பா தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...