வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பிகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலி, ஒருவர் காயம்

பிகாரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

வந்தே பாரத் ரயில் - கோப்புப்படம்.

Updated On :3 அக்டோபர் 2025, 10:51 am

பிகாரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரின் புர்னியா மாவட்டத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் வெள்ளிக்கிழமை பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்தனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காயமடைந்ட நபர் சிகிச்சைக்காக புர்னியா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புர்னியா சந்திப்பின் நிலைய மேலாளர் முன்னா குமார் கூறுகையில், கதிஹர்-ஜோக்பானி பிரிவில் அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இருட்டாகவும், வானிலை மேகமூட்டமாகவும் இருந்ததால், சிறுவர்கள் வேகமாக வந்த ரயிலை சரியான நேரத்தில் கவனிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே பலியானோரின் குடுத்தினருக்கு முதல்வர் நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்த நபர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறினார். விபத்தில் பலியானவர்கள் 14-18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், கஸ்பா தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

Summary

Four persons were killed and another was injured after being hit by a Vande Bharat train in Purnea district of Bihar on Friday while trying to cross the tracks, an official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.