
இந்தியாவில் பால் வளத் துறை வேகமாக வளர்ந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
ஹரியாணாவில் ரோடாக் பகுதியில் ரூ. 325 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பால் உற்பத்தி தொழிற்சாலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது,
இந்தியாவில் பால்வளத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் பால்வளத் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகவும், இந்தக் காலகட்டத்தில் 70 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த பால் உற்பத்தி ஆலை அதிநவீன இயந்திரங்களைக் கொண்டிருக்கும், இது நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாகத் திறக்கப்பட்ட பால் பண்ணையில் தயிர், மோர் உற்பத்திக்கான நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி நிலையமாகும், இங்கு நாள்தோறும் 150 மெட்ரிக் டன் தயிர், 3 லட்சம் லிட்டர் மோர் மற்றும் 10 மெட்ரிக் டன் இனிப்புகள் தயாரிக்கும் திறன் கொண்டது.
குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்ட சபர்கந்தா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சபர் பால் பண்ணை என்று அழைக்கப்படுகிறது. 2029ஆம் ஆண்டுக்குள் கூட்டுறவு சமிதி இல்லாத ஒரு பஞ்சாயத்து கூட நாட்டில் இருக்காது என்பதை உறுதியளிக்கிறேன்.
2024-25ஆம் ஆண்டில் 86 கோடியாக இருந்த பண்ணைகளின் எண்ணிக்கை, தற்போது 11.2 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோன்ற பால் உற்பத்தி 14.6 கோடி டன்னில் இருந்து 23.9 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில், பால் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, இதன் காரணமாக விவசாயிகள் வளமாகிவிட்டதாகவும் அவர் கூறினார். அதே நேரத்தில் இந்தியா உலகின் சிறந்த பால் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இதையும் படிக்க: வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.