விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இந்தியாவின் பால்வளத் துறை கடந்த 11 ஆண்டுகளில் 70% வளர்ச்சி: அமித் ஷா!

இந்தியாவின் பால்வளத் துறையில் சாதனை வளர்ச்சி குறித்து அமித் ஷா..

News image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

கோப்புப் படம்

Updated On :3 அக்டோபர் 2025, 10:32 am

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவில் பால் வளத் துறை வேகமாக வளர்ந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

ஹரியாணாவில் ரோடாக் பகுதியில் ரூ. 325 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பால் உற்பத்தி தொழிற்சாலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது,

இந்தியாவில் பால்வளத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் பால்வளத் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகவும், இந்தக் காலகட்டத்தில் 70 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த பால் உற்பத்தி ஆலை அதிநவீன இயந்திரங்களைக் கொண்டிருக்கும், இது நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாகத் திறக்கப்பட்ட பால் பண்ணையில் தயிர், மோர் உற்பத்திக்கான நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி நிலையமாகும், இங்கு நாள்தோறும் 150 மெட்ரிக் டன் தயிர், 3 லட்சம் லிட்டர் மோர் மற்றும் 10 மெட்ரிக் டன் இனிப்புகள் தயாரிக்கும் திறன் கொண்டது.

குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்ட சபர்கந்தா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சபர் பால் பண்ணை என்று அழைக்கப்படுகிறது. 2029ஆம் ஆண்டுக்குள் கூட்டுறவு சமிதி இல்லாத ஒரு பஞ்சாயத்து கூட நாட்டில் இருக்காது என்பதை உறுதியளிக்கிறேன்.

2024-25ஆம் ஆண்டில் 86 கோடியாக இருந்த பண்ணைகளின் எண்ணிக்கை, தற்போது 11.2 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோன்ற பால் உற்பத்தி 14.6 கோடி டன்னில் இருந்து 23.9 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில், பால் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, இதன் காரணமாக விவசாயிகள் வளமாகிவிட்டதாகவும் அவர் கூறினார். அதே நேரத்தில் இந்தியா உலகின் சிறந்த பால் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

Summary

Union Home Minister Amit Shah said that the dairy sector in India is growing rapidly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.