மணிப்பூரில் சக்திவாய்ந்த 2 ஐஇடி ரக குண்டுகள் கண்டெடுப்பு
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் இரண்டு சக்திவாய்ந்த ஐஇடி ரக குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.


மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் இரண்டு சக்திவாய்ந்த ஐஇடி ரக குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
உளவுத் துறை தகவல்களின் பேரில், அசாமின் கச்சார் மாவட்டத்துடனான மாநில எல்லைக்கு அருகிலுள்ள மகா பஸ்தியில் அசாம் ரைபிள்ஸ் படையினர்(மத்திய துணை ராணுவப் படை) ஞாயிற்றுக்கிழமை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையின்போது "மூன்று மின் சாதனங்களுடன் 12 கிலோ எடையுள்ள இரண்டு ஐஇடி வெடிபொருட்கள் மற்றும் 12 மீட்டர் வெடிக்கும் தண்டு ஆகியவை மீட்கப்பட்டன," என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
பின்னர் வெடிகுண்டு செயலிழப்புப் படையினரால் ஐஇடி வெடிபொருட்கள் பாதுகாப்பாக அழிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...