ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிகாரில் 20 ஆண்டுகளாக ஆளும் கட்சி செய்யாததை ஆர்ஜேடி செய்யும்: தேஜஸ்வி யாதவ்

பிகாரில் கடந்த 20 ஆண்டுகளாக ஆளும் கட்சி செய்யாததை 20 மாதங்களில் செய்வோம் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

News image
தேஜஸ்வினி யாதவ்- கோப்புப் படம்
Updated On :6 அக்டோபர் 2025, 1:56 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பிகாரில் கடந்த 20 ஆண்டுகளாக ஆளும் கட்சி செய்யாததை 20 மாதங்களில் செய்வோம் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

மத்தியில் கடந்த 17 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் பிகாரில் எந்தவித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நவ. 6 மற்றும் 11 என இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவான வாக்குகள் நவ. 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனையொட்டி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தேஜஸ்வி யாதவ் பதிவிட்டுள்ளதாவது,

''அடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்குப் பிறகு துக்கங்கள் மற்றும் பிரச்னைகளை அகற்றும் பிரமாண்ட திருவிழா வரவுள்ளது. அந்த நாளில் ஒவ்வொரு பிகாரைச் சேர்ந்தவர்களும் தேஜஸ்வியுடன் மகிழ்ச்சியைக் கொண்டாடுவீர்கள். ஏனெனில், அந்த நாளில் ஒவ்வொரு பிகாரியும் முதல்வராவார்.

நவ. 11 ஆம் தேதியை மக்கள் யாரும் மறந்துவிடக் கூடாது. பிகாரின் சிறந்த எதிர்காலம், மேம்பாடு, வளர்ச்சி மற்றும் உயர்வுக்காக பொன்னெழுத்துகளாக் பொறிக்கப்பட்ட நாளாக இந்த தேதி மாறும். முழு அர்ப்பணிப்புடன் ஒவ்வொரு பிகாரியும் தேர்தலில் இணைய வேண்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

summary

Every Bihari will become CM Tejashwi calls Bihar polls festival of change

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.