மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நாட்டின் பாலின விகிதம்: 1000 ஆண்களுக்கு 917 பெண்கள்!

நாட்டில் பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :6 அக்டோபர் 2025, 12:50 pm

2021 -2023 கணக்கெடுப்பின்படி நாட்டின் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 917 பெண்கள் என இருப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை கூடுதல் செயலாளர் மற்றும் இயக்குநர் ஆராதனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

கருத்தரிக்கும்போது உருவாகும் கருவின் பாலினத்தை முன்கூட்டியே அறிவிப்பதற்கு தடை விதிக்கும் வகையிலான சட்டத்தை வலுப்படுத்தியதன் விளைவாக நாட்டில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் முன்பை விட அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன் கருத்தரிப்பு மற்றும் பிறப்புக்கு முன்பு கருவின் நோய் கண்டறிதல் நுட்பங்களை வலுப்படுத்தும் தேசிய உணர்திறன் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது,

''பாலின பிறப்பு விகிதத்தில் நேர்மறையான இலக்கை நாடு எட்டியுள்ளது. 2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மாதிரிப் பதிவு முறைப்படி, பாலின விகிதம் 18 புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதாவது, 2016-18 காலகட்டத்தில் 1,000 ஆண்களுக்கு 819 பெண்கள் மட்டுமே இருந்த நிலையில், 2021-23 ஆண்டில் 917 பெண்களாக அதிகரித்துள்ளது.

2021 - 23 கணக்கெடுப்பின்படி ஆயிரம் ஆண்களுக்கு 917 பெண்கள் உள்ளனர். கருவின் பாலினத்தை முன்கூட்டியே அறிய தடை விதிக்கும் சட்டத்தை வலுப்படுத்தியதால் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது.

ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பிறப்பானது வலுவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும் அதிக மீள்தன்மையுடையதாகவும் உள்ளது. அதாவது, இயற்கையாகவே ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் உயிர்வாழ்தல் அதிக சாத்தியத்தைக் கொண்டது.

ஒரு சமூகமோ அல்லது தனி நபரோ ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, எந்த பாலினக் குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அல்ல'' எனக் குறிப்பிட்டார்.

Summary

India’s sex ratio at birth improved with 917 females per 1,000 males in 2021-23: Centre

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.