டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இதுபோன்ற சம்பவம் என்னை ஒருபோதும் பாதிக்காது: பி.ஆர். கவாய்!

காலணி வீச்சு போன்ற சம்பவம் என்னை ஒருபோதும் பாதிக்காது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.

News image
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்- ANI
Updated On :6 அக்டோபர் 2025, 8:03 am

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: இதுபோன்ற சம்பவங்கள் என்னை ஒருபோதும் பாதிக்காது என்று வழக்குரைஞர் ஒருவர் தன் மீது காலணி வீச முயன்ற சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.

விஷ்ணு சிலையின் தலை ஒன்று சமூக விரோதக் கும்பலால் உடைக்கப்பட்ட நிலையில், அதனை மீண்டும் சரி செய்ய உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்குரைஞர் ஒருவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இதற்கு எவ்வாறு உத்தரவிட முடியும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கேள்வி எழுப்பிய நிலையில், அதிருப்தி அடைந்த வழக்குரைஞர், தன்னுடைய காலணியை கழற்றியதாகக் கூறப்படுகிறது.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நீதிமன்ற காவலர்கள், உடனடியாக செயல்பட்டு, அவரிடமிருந்து காலணியைப் பறித்துக்கொண்டு, வழக்குரைஞரை நீதிமன்ற அறைக்கு வெளியே அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்ற அறையில் நடந்த இந்த சலசலப்பு அனைத்தையும் கவனித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இதற்கெல்லாம் கவனத்தை சிதறவிடக் கூடாது, நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன், இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் என்னை பாதிக்காது என்று கூறிவிட்டு, வழக்கம் போல தன்னுடைய பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட முயன்ற வழக்குரைஞர் யார் என்பது குறித்தும், அவரது தாக்குதல் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

summary

A lawyer allegedly tried to hurl a shoe towards Chief Justice of India BR Gavai during proceedings in the Supreme Court on Monday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.