மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசாவில் பாஜக நிர்வாகி சுட்டுக்கொலை!

ஒடிசாவில் பாஜக நிர்வாகி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து...

News image

ஒடிசாவில் பாஜக நிர்வாகி பிட்பாஷ் பாண்டா சுட்டுக்கொல்லப்பட்டார்

Updated On :7 அக்டோபர் 2025, 8:20 am

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில், பாஜக நிர்வாகியான பிட்பாஷ் பாண்டா, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கஞ்சம் மாவட்டத்தின், பெர்ஹாம்பூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரும், பாஜக நிர்வாகியுமான பிட்பாஷ் பாண்டா, நேற்று (அக். 6) இரவு 10 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதையடுத்து, சம்பவயிடத்துக்கு விரைந்த காவல் துறையினர், பிட்பாஷ் பாண்டாவின் உடலைக் கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, காவல் துறை உயர் அதிகாரி சரவண விவேக் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட பாஜக நிர்வாகி பிட்பாஷ் பாண்டாவின் இறுதிச் சடங்கு இன்று காலை நடைபெற்ற நிலையில், இந்தப் படுகொலைக்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைந்தது முதல், சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாக, பிஜு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

In Odisha's Ganjam district, BJP functionary Pitbash Panda was shot dead by unidentified assailants.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.