வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

உங்கள் தொண்டு எங்களுக்கு தேவையில்லை! மத்திய அரசுக்கு கேரள நீதிமன்றம் கடும் தாக்கு!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுத்த மத்திய அரசு மீது கேரள நீதிமன்றம் கடும் தாக்கு

News image
Updated On :8 அக்டோபர் 2025, 2:35 pm

இணையதளச் செய்திப் பிரிவு

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுத்த மத்திய அரசு, கேரள மக்களைத் தோல்வியடையச் செய்ததாக கேரள உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தின் வயநாட்டில் 2024-ல் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததையடுத்து, மத்திய அரசின் மீது கேரள உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மத்திய அரசு தரப்பு வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் மற்றும் ஜோபின் செபாஸ்டியன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ``கேரள மக்களைத் தோல்வியடையச் செய்துவிட்டதாக மத்திய அரசிடம் கூறுங்கள்.

இந்த பிரமாணப் பத்திரத்தின் மூலம், நீங்கள் இந்த அதிகாரத்துவ பேச்சின் பின்னால் ஒளிந்து கொண்டு, `நீங்கள் செயல்பட சக்தியற்றவர் என்று கூறுகிறீர்கள்’ என்பதை மீண்டும் தெளிவாகக் காட்டியுள்ளீர்கள்.

இது வெறும் அதிகாரத்துவப் பேச்சு. மத்திய அரசு செயல்பட முடியுமா என்பது முக்கியமல்ல; அவர்கள் செயல்படத் தயாராக இருக்கிறார்களா என்பதுதான் முக்கியம். ஆனால், நீங்கள் செயல்பட விரும்பவில்லை. அதைத் தைரியமாகச் சொல்லுங்கள்; யாரை முட்டாளாக்க முயற்சிக்கிறீர்கள்?

அவர்களுக்கு தைரியம் இருந்தால், உதவத் தயாராக இல்லை என்று சொல்லட்டும். ஆனால், இதுபோன்ற சமயங்களில் மக்களை மத்திய அரசு தோல்வியடையச் செய்துள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இதனைச் சமாளிப்பது எப்படி என்று எங்களுக்கு தெரியும். மத்திய அரசின் உதவி எங்களுக்கு தேவையில்லை. அதிகாரப் பிரிவினைக் கொள்கையை மதிக்குமாறு நமது அரசியலமைப்பு கூறுவதால், மத்திய அரசுக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க மாட்டோம். ஏனெனில் நமது பெருந்தன்மை, அரசியலமைப்பை மதிக்கும் மாநிலம் என்பதாலும்தான் என்று தெரிவித்தனர்.

மேலும், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் பெற்ற கடன்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தள்ளுபடி செய்ய வங்கிகள் தயாராக உள்ளனவா? என்பதை விளக்கும் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த வாதத்தின்போது, 2024-ல் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குஜராத் மற்றும் அஸ்ஸாமுக்கு மத்திய அரசு ரூ. 707 கோடியை அனுமதித்ததாக செய்தித்தாள்களில் வெளியான செய்திகளையும் நீதிமன்றம் மேற்கோள் காட்டியது. கடுமையான வெள்ளம் அல்லது நிலச்சரிவு என்று வகைப்படுத்தப்படாதவற்றுக்கு ரூ. 707 கோடி ஒதுக்கப்பட்டது என்று கூறியது.

அதுமட்டுமின்றி, தீயணைப்பு சேவைகளின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின்கீழ் ஹரியாணா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானுக்கு ரூ. 903.67 கோடியை ஒப்புதல் அளித்ததையும் மேற்கோள் காட்டினர்.

summary

Union govt has failed Kerala, we don't need your charity: High Court on refusal to waive loans for Wayanad disaster victims

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.