அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

10 ஆண்டுகளில் லட்சக்கணக்கானோர் வானில் பறந்துள்ளனர்: பிரதமர் மோடி பெருமிதம்

கடந்த 10 ஆண்டுகளில் லட்சக்கணக்கானோர் முதன்முறையாக வானில் பறந்து கனவை நனவாக்கியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

News image
பிரதமர் மோடியுடன் கௌதம் அதானி- PTI
Updated On :8 அக்டோபர் 2025, 1:53 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கடந்த 10 ஆண்டுகளில் லட்சக்கணக்கானோர் முதன்முறையாக வானில் பறந்து கனவை நனவாக்கியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் நவி மும்பையில் ரூ. 19,650 கோடி மதிப்பில் தாமரை வடிவில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், நவி மும்பையில் பல்வேறு திட்டங்களையும் தொடக்கி வைத்தார்.

நகரின் முதல் நிலத்தடி பாதை வழியாக தெற்கு மற்றும் மத்திய மும்பையை இணைக்கும் புதிய மெட்ரோ பாதையின் இறுதிக் கட்டப் பணிகளை நிறைவு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ``ஆசியாவின் மிகப்பெரிய இணைப்பு மையமாக நவி மும்பை விமான நிலையம் இருக்கும். மும்பை முழுவதும் எளிதாகப் பயணிக்கக் கூடிய நகரம் முழுவதும் நிலத்தடி மெட்ரோவை தொடங்குவது பெரிய சாதனை.

நவி மும்பையில் 1,160 ஹெக்டர் பரப்பளவில், இந்தியாவின் தேசிய மலரான தாமரையை ஒத்திருக்கும்வகையில் விமான நிலையம் கட்டப்பட்டிருக்கிறது. தற்போது ஆண்டுக்கு 2 கோடி பயணிகளும், வரும் ஆண்டுகளில் 9 கோடி பயணிகளை கையாளும் வகையில் விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டில், இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இப்போது 160-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், லட்சக்கணக்கான மக்கள் முதன்முறையாக வானில் பறந்து, தங்கள் கனவுகளை நனவாக்கியுள்ளனர்.

Story image

மும்பை பொருளாதார தலைநகரம் மட்டுமல்ல; இந்தியாவின் மிகவும் துடிப்பான நகரங்களில் ஒன்று என்பதால்தான், பயங்கரவாதிகள் மும்பையை தாக்கினர். காங்கிரஸின் பலவீனம்தான், பயங்கரவாதிகளை பலப்படுத்தியது. எங்களை பொறுத்தவரை, தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பைவிட வேறேதும் முக்கியமில்லை’’ என்று தெரிவித்தார்.

தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது மகன் ஜீத் அதானியுடன் பிரதமர் மோடி, விமான நிலையத்தைச் சுற்றிப் பார்த்தார்.

summary

PM Modi Opens Adani Airport, Metro Line as $4 Billion Mumbai Facelift Kicks In

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.