மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மீண்டும் போர் ஏற்பட்டால், முன்பைவிட சிறந்த முடிவை அடைவோம்: பாகிஸ்தான்

இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்பட்டால், முன்பைவிட சிறந்த முடிவு எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிஃப் பேச்சு

பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிஃப் - கோப்புப் படம்

Published On :

இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்பட்டால், முன்பைவிட சிறந்த முடிவு எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிஃப் பேசியுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பிரச்னை நிலவி வரும்நிலையில், இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்படுமாயின், முன்பைவிட சிறந்த முடிவு எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கவாஜா பேசுகையில், ``இந்தியாவுடன் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை; ஆனால், அதற்கான அபாயங்கள் உண்மையானவை. அதனை மறுக்க முடியாது. மீண்டும் போர் ஏற்பட்டால், முன்பைவிட சிறந்த முடிவை நாங்கள் அடைவோம்.

ஔரங்கசீப் ஆட்சியின்கீழ் இருந்தபோது தவிர, இந்தியா ஒருபோதும் ஒன்றுபட்ட நாடாக இருந்தது கிடையாது. பாகிஸ்தான், அல்லாஹ்வின் பெயரால் உருவாக்கப்பட்டது. உள்நாட்டுக்குள் எங்களுக்குள் வாதமும் போட்டியும் இருந்தாலும், இந்தியாவுடனான போரில் ஒன்றுபடுகிறோம்’’ என்று தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஆதரிப்பதை அரசு நிறுத்த வேண்டும் என்று சமீபத்தில் பாகிஸ்தானை எச்சரித்த இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி உபேந்திர திவிவேதி, இந்த முறை இந்தியா தயாராக உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் 1.0-ல் நாங்கள் காட்டிய நிதானத்தை இம்முறை காட்ட மாட்டோம். இந்த முறை, உலக வரைபடத்தில் நீடிப்பது குறித்து பாகிஸ்தான் சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Summary

'Risks are real': Pakistan defence minister Khawaja Asif on possibility of war with India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.