அசாமிய பாடகர் ஸுபீன் கர்க்கின் மரணத்தில், இதுதொடர்பாக அவரது உறவினரான சந்தீபன் கர்க் என்பவரை காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர்.
வடகிழக்கு இந்திய கலாசார விழாவில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றிருந்த பிரபல அசாமிய பாடகர் ஸுபீன் கர்க் அங்கு கடலில் குளிக்கும்போது செப்.19-ல் நீரில் மூழ்கி பலியானதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் அவர் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பலியாகவில்லை, அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது.
ஸ்பீனின் இசைக்குழு உறுப்பினர் சேகர் ஜோதி கோஸ்வாமி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஸ்பீனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக, ஸுபீன் கர்க் கலந்து கொள்ளச் சென்றிருந்த விழாவின் ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா, பாடகரின் மேலாளர் சித்தார்த் சர்மா, இசைக்குழு உறுப்பினர் சேகர் ஜோதி கோஸ்வாமி, பாடகர் அமிர்தப்ரவா மஹந்தா ஆகியோரை மத்தியப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளனர்.
இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் 5-வது நபராக ஸுபீனின் தந்தைவழி மாமாவின் மகன் சந்தீபன் கர்க் என்பவரையும் சிபிஐ கைது செய்துள்ளது.
அசாம் காவல் சேவை அதிகாரியாக வேலை பார்த்துவரும் சந்தீபன், காம்ரூப் மாவட்டத்திற்கான சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். சந்தீபன் கர்க்கை 14 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் உறவினரான போலீஸ் அதிகாரியே பாடகர் கொலையில் ஈடுபட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Zubeen Garg's cop cousin arrested, was at Singapore yacht party where singer died
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லியின் ஜஹாங்கிா்புரியில் மாற்றுத்திறனாளியிடம் கொள்ளையடித்தவர் கைது!

மூதாட்டியை மிரட்டி பணம் பறிப்பு: போலி போலீஸ் கைது
தில்லியில் துப்பாக்கிச் சூட்டுக்கு பின்பு ஹிமான்ஷூ பாவ் கும்பலைச் சோ்ந்தவா் கைது

காவலாளி கொலை வழக்கை பல கோணங்களில் விசாரிக்கும் தில்லி போலீஸ்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




