மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

நொய்டாவில் வேகமாக வந்த காா் வாகனங்கள் மீது மோதி விபத்து: ஓட்டுநா் கைது

நொய்டாவில் புதன்கிழமை இரவு வேகமாக வந்த ஸ்போா்ட்ஸ் காா் நான்கு காா்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் மீது மோதியதில் பெரும் குழப்பம்

கோப்புப் படம்

Published On :

நொய்டாவில் புதன்கிழமை இரவு வேகமாக வந்த ஸ்போா்ட்ஸ் காா் நான்கு காா்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் மீது மோதியதில் பெரும் குழப்பம் ஏற்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா். அதிா்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: குல்ஷன் டி-பாயிண்ட் அருகே புதன்கிழமை இரவு இந்த விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே, செக்டாா் 100-ஐ சோ்ந்த சுனீத் என்ற ஓட்டுநா் எக்ஸ்பிரஸ்வே காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டாா். அவரது வாகனத்தில் ஆடம்பரமான பதிவு எண் இருந்தது. விசாரணைக்காக காா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மோதலின் விளைவாக பல வாகனங்கள் சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.