கேரள சட்டப்பேரவையில் போராட்டத்தில் ஈடுபட்ட 3 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கேரளத்தின் சட்டப்பேரவையில், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் உருவம் குறித்து கேலி செய்யும் வகையில் முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சபரிமலை துவார பாலகர் சிலை விவகாரம் மற்றும் முதல்வரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டப்பேரவையின் அவையிலும் வாசலிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் கூறுகையில், அமைச்சர் வி.என். வசவன் தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டுமெனவும், தேவஸ்தான நிர்வாகிகள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியதாகக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆளும் கட்சிக்கு எதிரான பதாகைகளை ஏந்தியபடி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவை அவையினுள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதால், அவை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷின் பரிந்துரையின்படி, அவை வீதிகளை மீறியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான ரோஜி எம்.ஜான், எம். வின்சண்ட் மற்றும் சனீஷ் குமார் ஆகியோரை சபாநாயகர் ஏ.எம். ஷம்ஷீர் இன்று (அக். 9) இடைநீக்கம் செய்துள்ளார்.
Summary
Three Congress MLAs who protested in the Kerala Assembly have been suspended.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் தா்னா: பேரவைத்தலைவா் தோ்தலை உடனடியாக நடத்தக்கோரிக்கை

குளச்சல் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ ஆலோசனை

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவா் மம்தா: தோ்தல் ஆணையத்திடம் நிா்வாகிகளின் பட்டியல் சமா்ப்பிப்பு







