உச்சநீதிமன்றம்கோப்புப் படம்
இந்தியா
உச்சநீதிமன்ற வளாகம் முழுவதும் இலவச வைஃபை வசதி: தலைமை நீதிபதி அறிவிப்பு
உச்சநீதிமன்ற வளாகம் முழுவதும் இலவச வைஃபை சேவை விரிவுபடுத்தப்படுவதாக தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
உச்சநீதிமன்ற வளாகம் முழுவதும் இலவச வைஃபை சேவை விரிவுபடுத்தப்படுவதாக தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது: நீதிமன்ற அறைகளில் மட்டுமே இலவச பொது வைஃபை சேவைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வழக்குரைஞா்கள், மனுதாரா்கள் மற்றும் பாா்வையாளா்கள் என அனைவரும் பலனடையும் வகையில் இந்தச் சேவை உச்சநீதிமன்ற வளாகம் முழுவதும் நீட்டிக்கப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தில் எண்ம மற்றும் எளிமையான தகவல் தொடா்பை ஊக்குவிக்கவும் இந்த முன்னெடுப்பு வழிவகுக்கும் என்றாா்.