அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

உச்சநீதிமன்ற வளாகம் முழுவதும் இலவச வைஃபை வசதி: தலைமை நீதிபதி அறிவிப்பு

உச்சநீதிமன்ற வளாகம் முழுவதும் இலவச வைஃபை சேவை விரிவுபடுத்தப்படுவதாக தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :10 அக்டோபர் 2025, 8:23 pm

உச்சநீதிமன்ற வளாகம் முழுவதும் இலவச வைஃபை சேவை விரிவுபடுத்தப்படுவதாக தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: நீதிமன்ற அறைகளில் மட்டுமே இலவச பொது வைஃபை சேவைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வழக்குரைஞா்கள், மனுதாரா்கள் மற்றும் பாா்வையாளா்கள் என அனைவரும் பலனடையும் வகையில் இந்தச் சேவை உச்சநீதிமன்ற வளாகம் முழுவதும் நீட்டிக்கப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தில் எண்ம மற்றும் எளிமையான தகவல் தொடா்பை ஊக்குவிக்கவும் இந்த முன்னெடுப்பு வழிவகுக்கும் என்றாா்.