மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஜம்மு-காஷ்மீரில் காணாமல்போன ராணுவ கமாண்டோக்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்கில் காணாமல் போன வீரரின் உடலை பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை கண்டுபிடித்தனர்.

News image

ஜம்மு-காஷ்மீர்.

கோப்புப்படம்.

Updated On :10 அக்டோபர் 2025, 3:51 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்கில் காணாமல் போன வீரரின் உடலை பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை கண்டுபிடித்தனர்.

வியாழக்கிழமை வீரரின் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மற்றொரு உடல் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இருவரும் தாழ்வெப்பநிலை காரணமாக இறந்ததாகத் தெரிகிறது என்று அதிகாரிகள் கூறினர். வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ராணுவம் அஞ்சலி செலுத்தியது.

வீரர்களின் உச்சபட்ச தியாகத்தை சினார் கார்ப்ஸ் மதிக்கிறது. மேலும் அவர்களின் தைரியமும் அர்ப்பணிப்பும் என்றென்றும் எங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று சினார் கார்ப்ஸ் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளது. அனந்த்நாக் மாவட்டத்தின் கோகா்நாக் வனப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை நடைபெற்றது.

இதில் ராணுவம், காவல் துறையினா் இணைந்து தேடுதல் பணியை மேற்கொண்டனா். பயங்கரவாதிகள் யாரும் கிடைக்காத நிலையில் ராணுவத்தின் சிறப்பு ரோந்துப் பிரிவு காமாண்டோக்கள் இருவா் முகாமுக்குத் திரும்பி வராதது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

அவா்களிடம் இருந்த தொலைத்தொடா்பு கருவிகளுடனான இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. ஹெலிகாப்டா் மூலமும் தேடுதல் பணி நடைபெற்றது. தொடா் மழை காரணமாக அந்தப் பகுதியில் வானிலை மிகவும் மோசமாக இருந்தது. மேலும் மலைசாா்ந்த வனப் பகுதியில் தேடுவதிலும் சிரமம் நீடித்த நிலையில் 3 நாள்களுக்குப் பிறகு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Summary

Security forces on Friday found the body of a soldier who had gone missing in Jammu and Kashmir's Anantnag district earlier this week, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.