மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆந்திரத்தில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: ரூ.550 கோடி புகையிலை எரிந்து நாசம்

ஆந்திரத்தில் தொழிற்சாலையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் ரூ.550 கோடி மதிப்பிலான புகையிலை எரிந்து நாசமானது.

News image
கோப்புப்படம். - PTI
Updated On :10 அக்டோபர் 2025, 12:12 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஆந்திரத்தில் தொழிற்சாலையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் ரூ.550 கோடி மதிப்பிலான புகையிலை எரிந்து நாசமானது.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள புகையிலை தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சுமார் 11,000 டன் புகையிலை எரிந்து நாசமானதாக தொழிற்சாலை நிர்வாகம் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள புகையிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட ரூ.550 கோடி மதிப்பிலான புகையிலை எரிந்து நாசமானது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், அப்பகுதியில் இருந்து அடர்த்தியான புகை வெளியேறி வருகிறது.

தகவல் கிடைத்தவுடன் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். ஐந்து தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு, புகையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

சம்பவ இடத்தை ஆய்வு செய்த பிரகாசம் மாவட்ட கண்காணிப்பாளர் வி. ஹர்ஷவர்தன் ராஜு, தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து விரைவில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்ததாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இருப்பினும், சரியான காரணத்தைக் கண்டறியவும், இழப்புகளை சரிபார்க்கவும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், போலீஸார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

summary

Tobacco worth Rs 550 crore was destroyed in a major fire that broke out during the small hours of Friday at a Tobacco factory here in Prakasam district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.