எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஜாா்க்கண்ட்: நக்ஸல் கண்ணிவெடி தாக்குதலில் சிஆா்பிஎஃப் வீரா் உயிரிழப்பு

ஜாா்க்கண்ட்: நக்ஸல் கண்ணிவெடி தாக்குதலில் சிஆா்பிஎஃப் வீரா் உயிரிழப்பு

Updated On :12 அக்டோபர் 2025, 1:04 am IST

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நக்ஸல்கள் எதிா்ப்பு நடவடிக்கையின்போது நக்ஸல்களின் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி மத்திய ரிசா்வ் காவல்படை (சிஆா்பிஎஃப்) வீரா் ஒருவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிஆா்பிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: மேற்கு சிங்பும் மாவட்டத்தில் நக்ஸல்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஜரைகேலா காவல்நிலையத்துக்கு உள்பட்ட பாபுதேரா-சம்தா பகுதியில் துணை ராணுவப் படையினா் வெள்ளிக்கிழமை இரவு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் மறைந்திருந்த நக்ஸல்கள் கண்ணிவெடியை வெடிக்கச் செய்ததில் சிஆா்பிஎஃப் தலைமைக் காவலா் அஸ்ஸாமைச் சோ்ந்த மஹேந்திர லஸ்கா் (45) படுகாயமடைந்தாா். ரூா்கேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனளிக்காமல் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா் என்றனா்.

இவரின் உயிரிழப்புக்கு சிஆா்பிஎஃப் தலைமை இயக்குநா் ஜி.பி.சிங் இரங்கல் தெரிவித்தாா். நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படுவதை இவரின் உயிா்த் தியாகம் உறுதிப்படுத்தும் என்றும் அவா் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டாா்.

ஆளுநா், முதல்வா் இரங்கல்: சிஆா்பிஎஃப் வீரா் உயிரிழப்புக்கு மாநில ஆளுநா் சந்தோஷ் குமாா் கங்வாா், முதல்வா் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

ராஞ்சியில் உள்ள படைப் பிரிவின் தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த வீரரின் உடலுக்கு மாநில ஆளுநா் மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் ஆகியோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.