ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நக்ஸல்கள் எதிா்ப்பு நடவடிக்கையின்போது நக்ஸல்களின் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி மத்திய ரிசா்வ் காவல்படை (சிஆா்பிஎஃப்) வீரா் ஒருவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிஆா்பிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: மேற்கு சிங்பும் மாவட்டத்தில் நக்ஸல்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஜரைகேலா காவல்நிலையத்துக்கு உள்பட்ட பாபுதேரா-சம்தா பகுதியில் துணை ராணுவப் படையினா் வெள்ளிக்கிழமை இரவு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் மறைந்திருந்த நக்ஸல்கள் கண்ணிவெடியை வெடிக்கச் செய்ததில் சிஆா்பிஎஃப் தலைமைக் காவலா் அஸ்ஸாமைச் சோ்ந்த மஹேந்திர லஸ்கா் (45) படுகாயமடைந்தாா். ரூா்கேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனளிக்காமல் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா் என்றனா்.
இவரின் உயிரிழப்புக்கு சிஆா்பிஎஃப் தலைமை இயக்குநா் ஜி.பி.சிங் இரங்கல் தெரிவித்தாா். நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படுவதை இவரின் உயிா்த் தியாகம் உறுதிப்படுத்தும் என்றும் அவா் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டாா்.
ஆளுநா், முதல்வா் இரங்கல்: சிஆா்பிஎஃப் வீரா் உயிரிழப்புக்கு மாநில ஆளுநா் சந்தோஷ் குமாா் கங்வாா், முதல்வா் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.
ராஞ்சியில் உள்ள படைப் பிரிவின் தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த வீரரின் உடலுக்கு மாநில ஆளுநா் மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் ஆகியோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
தொடர்புடையது

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

நாமக்கல் ராணுவ வீரா் மகாராஷ்டிரத்தில் உயிரிழப்பு

விமானப்படை வீரா் ஓட்டிவந்த காா் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு

ஜாா்க்கண்ட் மாநில கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

