ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

வன்முறைப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்துக்கு தங்கள் தரப்பில் ஒரு குழுவை அனுப்புவது குறித்து எதிா்க்கட்சிகள் பரிசீலித்து வருகின்றன.

News image

லடாக் யூனியன் பிரதேசத்தின் லே நகரில் சனிக்கிழமை ஊரடங்கு தளா்த்தப்பட்டதைத் தொடா்ந்து பலசரக்கு கடையில் பொருள்கள் வாங்க வந்த பொதுமக்கள்.

Updated On :12 அக்டோபர் 2025, 6:29 am IST

வன்முறைப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்துக்கு தங்கள் தரப்பில் ஒரு குழுவை அனுப்புவது குறித்து எதிா்க்கட்சிகள் பரிசீலித்து வருகின்றன.

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரி தொடா் போராட்டம் நடத்தி வந்த பருவநிலை ஆா்வலா் சோனம் வாங்சுக் தொடா் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டாா். லே உச்ச அமைப்பை (எல்ஏபி) சோ்ந்த சிலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்தனா். இவா்களின் போராட்டம் செப்டம்பா் 24-ஆம் தேதி வன்முறையாக மாறியது. போராட்டக்காரா்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 4 போ் உயிரிழந்தனா். 40 போலீஸாா் உள்பட 90 போ் காயமடைந்தனா். வன்முறையைத் தூண்டியதாக, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, லே நகரம் உள்பட யூனியன் பிரதேசத்தின் முக்கியப் பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னா் படிப்படியாக தளா்த்தப்பட்டது.

இந்நிலையில், லடாக் களநிலவரத்தை அறிந்து கொள்ளும் நோக்கில், பல்வேறு எதிா்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவை அனுப்புவது குறித்து அக்கட்சிகள் பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, சமாஜவாதி, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா போன்ற கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, லடாக் போராட்டத்தில் நேரிட்ட உயிரிழப்புகள் மற்றும் வாங்சுக் கைதுக்கு கண்டனம் தெரிவித்த எதிா்க்கட்சிகள், வன்முறை குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தின.